17 குளங்களை அமைத்து நாட்டின் கவனத்தை ஈர்த்த தாசனதொட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்மனே காமேகவுடா(86) நேற்று 17ஆம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்த இவர், வெங்கட கவுடா மற்றும் ராஜம்மா போன்றோரின் மகன் ஆவார். இவர் கல்வியறிவு இல்லை என்றாலும், சுற்றுப்புறச்சூழல் பற்றிய அறிவு வளம் பெற்றவர் ஆவார். அதன்படி விலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீருக்காக போராடக் கூடாது என்பதற்காக தன் சொந்த பணத்தில் 17 குளக்கரைகளை கல்மனே காமேகவுடா கட்டி இருக்கிறார்.
இதனால் மாளவல்லி பகுதியில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் பயனடைந்துள்ளது. தரிசுநிலங்களில் ஏரிகள் கட்டி நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் எனும் அவரது தொலைநோக்கு பார்வையினை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். இதன் காரணமாக கல்மனே காமேகவுடா நாடு முழுதும் அறியப்பட்டார்.