Categories
தேசிய செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு…. சிறையில் இருந்து சற்று முன் விடுதலையானார் சுதாகரன்…!!!

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் இருந்த சுதாகரன் இன்று விடுதலையானார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதில் சசிகலா இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தியதால் இரண்டு பேரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் சுதாகரன் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட பத்து கோடியை பத்தாயிரம் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தாத காரணத்தினால் கோர்ட்டு உத்தரவின் பெயரில் மேலும் ஒன்றரை ஆண்டு தண்டனை அனுபவித்தார்.

இந்த நிலையில் சுதாகரனின் தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில் எண்பத்தி ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே அவர் விடுதலையாகி உள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சிறையில் இருக்க வேண்டிய நிலையில் 89 நாட்களுக்கு முன்னதாக அவர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |