Categories
Uncategorized

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி அதிரடி உயர்வு…. பயனாளிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு அதிரடி….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பல சேமிப்பு திட்டங்களும் அடங்கும்.சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான் . அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்தப்படும் .அதன்படி வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவேளைக்கு பிறகு வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்படுகிறது.

அதன்படி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் 0.20% உயர்த்தப்பட்டு 7.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கிசான் விகாஸ் பத்திரத்திற்கான வட்டி விகிதம் 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டு ஏழு சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடம் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதம் 5.8% உயர்த்தப்பட்டுள்ளது.இரண்டு ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதம் 5.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.ஆனால் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் போட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |