Categories
சினிமா தமிழ் சினிமா

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி…. “பங்கேற்காத தெருக்குரல் அறிவு”…. வெளியான காரணம்….!!!!!!

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு பங்கேற்காததற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

44ஆவது சர்வதேச ஜெஸ் ஒலிம்பியாட் போட்டி சென்ற 28ஆம் தேதி மகாபலிபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் தொடங்கியுள்ளது. இது வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் பங்கேற்க 186 நாடுகளில் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக கலை நிகழ்ச்சி நடைபெற்ற பொழுது உலகளவில் ஹிட்டான என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகி தீயும் கிடாகுழி மாரியம்மாளும் பாடினார்கள். இந்த பாடலின் ஒரிஜினல் வெர்சனை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடினார்கள். ஆனால் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குரல் அறிவு பங்கேற்கவில்லை. இதனால் அவர் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அவர் தற்பொழுது அமெரிக்கா சென்றிருக்கின்றாராம். திடீரென இந்நிகழ்ச்சி குறித்து கூறியதால் அவரால் வர முடியவில்லையாம்.

Categories

Tech |