Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செல்வ மக்கள் சேமிப்பு திட்டம்”…. ஒரே நாளில் தொடங்கப்பட்ட 200 கணக்குகள்…..!!!!

நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 200 செல்வ மக்கள் சேமிப்பு கணக்குகள் தொடங்க ப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் வேலூர் தபால் துறை கோட்டத்தில் இந்த மாதம் முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிறப்பு செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் திருவிழாவானது நடை பெற்று வருகின்றது. இந்த விழாவின் முதல் நாளான நேற்று வேலூர் தபால் கோட்டத்தில் இருக்கும் 152 தபால் நிலையங்களிலும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிதாக தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தினுடைய பெண் குழந்தைகளுக்கு அதற்கான புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கி உள்ளார். மேலும் அவர் புதிதாக தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு கணக்கின் புத்தகத்தை அந்தந்த பெண் குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தபால் துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்றனர்.

Categories

Tech |