செல்வராகவன்-கீதாஞ்சலி குடும்பத்தில் நடந்த சோக சம்பவம்.
தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களின் குடும்பத்தில் ஒரு சோகம் நடந்துள்ளது. அது என்னவென்றால் கீதாஞ்சலியின் கொள்ளு பாட்டி சென்ற 19ஆம் தேதி இயற்கை எய்தினார். இந்நிலையில் கீதாஞ்சலி தனது இணையதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அவர் ஒரு முழுமையான ராக்ஸ்டார். வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு இரும்பு பெண்மணி. 1923 இல் பிறந்த ஒரு பெண்ணுக்கு அவரது எண்ணங்கள் சில சமயங்களில் மில்லியன்களை விட முற்போக்கானவை. அவருக்கு நீண்ட ஆயுள் இருந்தது. அவரது வாழ்வையில் நிறைய கெட்டது ஆனால் நிறைய நல்லது இருந்தது. அவர் நல்லவற்றில் கவனம் செலுத்தினார். அவரது கொள்ளு பேர குழந்தைகள் அனைவரையும் பார்த்தார். தான் நேசித்த அனைவரும் நலமாக இருப்பதால் அவர் நிம்மதியாக சென்று விட்டார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் தனது கொள்ளுப்பாட்டியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.