சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புது கும்மிடிப்பூண்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி பரிதா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து செல்போன் உபயோகித்த காயத்ரியை அவரது தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த காயத்ரி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்ரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.