திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை ஜே.ஜே நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தினர் திருச்சி சிந்தாமணி பகுதியில் இருக்கும் கந்தசாமி என்பவரது வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் சென்று பார்த்த போது அந்த செல்போன் கோபுரம் மாயமானதை கண்டு சுரேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி ஜே. எம் 1 நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி கோட்டை போலீசார் கந்தசாமி மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.