சுற்றுலா சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்க முயற்சித்த பெண் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜாம் கேட் பகுதிக்கு சுற்றுலா சென்றார். மலைகள் நிறைந்த அழகிய அந்த இடத்தில் செல்ஃபி மோகம் கொண்ட நீது மகேஸ்வரி பல இடங்களில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் இறுதியாக பள்ளத்தாக்கு ஒன்றில் முனையில் நின்று கொண்டிருந்த நீது மகேஸ்வரி செல்ஃபி எடுக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீது மகேஸ்வரி மீட்கப்பட்டார். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.