வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துறிஞ்சிபட்டி பகுதியில் ஓட்டுநரான சூர்யா(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அவரது தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் சூர்யாவின் தந்தை பணம் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து சூர்யா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சூர்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.