செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகைத்தாய் மையம் என நான்கு வகை மருத்துவமையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த ஐம்பதாயிரம் ரூபாயும் வாடகைத்தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. மேலும் பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது.