Categories
தேசிய செய்திகள்

செம…. செல்போன் ஆப் மூலம் குடிநீர் தொட்டி இயக்கம்… கோவையில் புதிய அறிமுகம்…!!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசூர் ஊராட்சியில் இதனை மெய்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக குடிநீர் தொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி செல்போன் செயலி மூலம் இயங்கும் புதிய முறையை தனியார் மென்பொருள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலமாக தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிதல் மற்றும் குடிநீர் தொட்டியின் நீர்மட்டம் போன்றவற்றை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து ஒன்பது வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு குடிநீர் தேவைப்படும் நேரத்தில் தானாக இயங்கக்கூடிய விதமாக இந்த குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பெரிய கருப்பன் போன்றோர்  தொடங்கி வைத்துள்ளனர்.

Categories

Tech |