சென்னையை சேர்ந்த பாலிமா டெக் நிறுவனம் தமிழ்நாட்டில் செமி கான்ட்ராக்டர் உற்பத்திக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசுடன் பாலிமாடெக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. முதற்கட்டமாக உற்பத்தியை விரிவுபடுத்த தமிழ்நாட்டில் 130 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது பாலிமா டெக் நிறுவனம். 2025 ஆம் வருடத்திற்குள் மொத்தம் 100 கோடி டாலர் முதலீடு செய்வதற்கு பாலிமா டெக் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இது பற்றி பாலிமா நிறுவனத்தின் தலைவர் நத்தம் ஈஸ்வராம் செமி கண்டக்டர் உற்பத்திக்காக அரசின் பி எல் ஐ திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்து முதற்கட்ட உற்பத்திக்கான அனுமதியும் பெற்றிருப்பதாக கூறியுள்ளார்.
அடுத்த சில வாரங்களிலேயே செமி கண்டக்டர் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என பாலிமா டெக் நிறுவனம் கூறியுள்ளது. பாலிமா டெக் நிறுவனத்தின் முதற்கட்ட ஆலையில் ஆண்டுக்கு 250 மில்லியன் செமி கண்டக்டர் சிப்ஸ் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. மேலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயார் செய்வதற்கும் பாலிமா டெக் திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சில்வர் பேஸ் உள்ளிட்ட பொருட்களை பாலிமா டெக் இறக்குமதி செய்து வருகின்றது. ஆனால் விரைவில் உள்நாட்டிலேயே மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்யப்போவதாக பாலிமா டெக் கூறியுள்ளது.