நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்தபோது பல்வேறு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் ஆந்திராவும் ஒன்று. இதையடுத்து அங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் திருமணம் மற்றும் மத ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் 150 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.