செப்டம்பர் 11ம் தேதி முதல் அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக சிலவற்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இன்று தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு இமானுவேல் சேகரன் நினைவுதினம், தேவர் குருபூஜை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். வெறும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 11ம் தேதி டாஸ்மாக், உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.