தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முனைப்பில், கபசுர குடிநீர் வழங்கப்படுகின்றது. சென்னையில் பல இடங்களில் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.