Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…! காலை மற்றும் இரவில் மழை விட்டு விட்டு பெய்யும்”…. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…!!!!!

சென்னையில் இனி வரும் நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு செய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இதுபோல சேலம், திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். சென்னையில் திடீர் திடீரென மழை காலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யக்கூடும். வருகின்ற 15ஆம் தேதி முதல் கிழக்கத்திய காற்று வீச ஆரம்பமாகும். ஆகையால் அடுத்த பத்து நாட்களில் வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாகும் எனக் கூறியுள்ளார்.

https://www.facebook.com/tamilnaduweatherman/posts/666400111519370

Categories

Tech |