சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட இருவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு இரண்டு பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். சென்னை உயர்நீதிமன்ற பெண் நிதீபதிகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.