சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, வேலைநிமித்தமாகவும், படிப்புக்காகவும் வந்து தங்கியிருப்பவர்கள் பலரும் உணவுக்காக பெரிதும் நம்பியிருப்பது நடுத்தர விலையுள்ள உணவகங்களைத் தான். ஆனால், அண்மைக்காலமாக இங்கும் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி தொடங்கி, நெய்தோசை, வெங்காய தோசை என அனைத்துவகை உணவுகளும் குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. எரிவாயு விலை உயர்வு, மளிகைப்பொருட்கள் விலை அதிகரிப்பு என பல்வேறு காரணங்களால், வேறு வழியின்றி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உணவக உரிமையர்கள் தெரிவித்துள்ளனர்.