சாலையோர வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டப்படி சென்னையில் எந்த இடத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை அறிவிக்க மாநகராட்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தையும், விதிகளையும் அமல்படுத்த கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சட்டப்படி வியாபாரிகள் வியாபாரம் எங்கு செய்யலாம்? எங்கெல்லாம் வியாபாரம் செய்யக்கூடாது? என்று ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இடங்களை அறிவிக்கும் நடைமுறைகளை முடிக்க ஏதுவாக ஒரு மாதத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.