சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய வேகம் எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.பலி எண்ணிக்கையும் 1000 ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு எப்போது முடிவுக்கு வரும் என்று இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
இதில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் மருத்துவமனையில் – தலா 7 பேர், ஸ்டான்லி – 5 பேர், கீழ்ப்பாக்கம் – 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் – 2 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .