Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா… அரசு அடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது கல்லூரி விடுதியில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சென்னையில் உள்ள ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்ற சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் இருப்பதால் கல்லூரிகளை தற்காலிகமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |