சென்னையில் நடைபெற்ற ராணுவ தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நத்தம்பாக்கத்தில் ராணுவ பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ராணுவ பணிகளுக்கான குரூப் சி தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை வட மாநில இளைஞர்கள் உட்பட 1,728 பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் பங்கேற்ற வட மாநில இளைஞர்கள் 28 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத்தை பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. மேலும் சஞ்சய் என்பவருக்கு பதிலாக வினோத் சுக்ரா என்பவர் ஆள்மாறட்டும் செய்து தேர்வு எழுதியிருக்கிறார்.
இதனை தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சூழலில் முறைகேடாக தேர்வு எழுதிய 29 பேர் மீதும் தேர்வு கண்காணிப்பாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது பற்றி விசாரணை மேற்கொண்ட நந்தம்பாக்கம் போலீசார் அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை கைது செய்த போலீசர் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர் அதன் பின் அந்த 29 பேரையும் போலீசார் சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.