சென்னை ராஜ்பவனில் நடைபெற்றதேனீர் விருந்தில் கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் திடீர் என சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவியுடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் போன்றவர்கள் சந்தித்துள்ளனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேனீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக கவர்னர் ரவி அழைப்பு விடுத்திருக்கிறார். கவர்னர் அளிக்கும் இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை பங்கேற்பதில்லை என முடிவு செய்து இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் கவர்னர் ஆர்.என் ரவியை சந்தித்துள்ளனர். கவர்னர் தேநீர் விருந்தை பல்வேறு அரசியல் கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். நீட் விலக்கு தொடங்கி பல்வேறு மக்கள் கவர்னர் வசம் உள்ள நிலையில் கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் சந்தித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.