Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 6 முதல் 22 வரை…. புத்தக பிரியர்களுக்கு இனிப்பான செய்தி…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர். சென்னையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த வருடத்தில் நடைபெறவுள்ள 46வது புத்தகக்கண்காட்சி வரும் ஜனவரி 6ம் தேதியில் இருந்து ஜனவரி 22ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |