சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை (17.12.2022) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ஆம் தேதி விட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி கிழமை அட்டவணைப்படி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக் கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.