Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று முதல்…. இனி வாரத்தில் 7 நாட்களும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் அனைத்து ஞாயிறு கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஞாயிறு கிழமைகள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். திங்கள் முதல் சனி கிழமை வரை காலை 5.30 முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |