வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.
வட மாவட்டங்களில் உள்ள கடலோரத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மேலும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 11 வடமாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் உள்ள எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, சிந்தாரிப்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர், கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டலை, ஆலந்தூர், தரமணி, வேளச்சேரி, திருவான்மியூர், அடையார் போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது.