Categories
அரசியல் மாநில செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு டெல்லி வைக்கும் செக்…. ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்….? சிக்குவாரா செந்தில் பாலாஜி…!!!

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு தற்போது வேகம் எடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காரணத்தினால், அங்கு எப்படியாவது திமுக காலூன்ற வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்து கட்சி, ஆட்சி இரண்டிலும் அந்த பகுதியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பரபரப்பாக மேற்கொண்டு வரும் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட மோசடி வழக்கை அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது. அந்த வழக்கு சமீப காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் அதனை டெல்லி தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது. மதுரையில் நடைபெற்று வந்த இந்த வழக்கை ஹரிஷ் என்ற அதிகாரி விசாரித்து வருவதாகவும், அவருக்கு நெருக்கமானவர்கள் கரூரிலிருந்து அதிகாரிகளின் சொந்த ஊரான ஆந்திராவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

இந்த தகவலை அறிந்த டெல்லி மேலிடம் சென்னை அமலாக்கத் துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை மாற்றியுள்ளது. மேலும் இந்த வழக்கில் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளதாக கூறுகின்றனர். இதனால் செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏன் செந்தில் பாலாஜி மீதான வழக்கு தீவிரம் எடுத்து வருகின்றது என விசாரித்தால் திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக டெல்லி முடிவெடுத்து முக்கிய அமைச்சர்கள் குறித்த பட்டியலை தயாரித்து வருவதாகவும் இதில் செந்தில்பாலாஜி பெயர்தான் முதலில் உள்ளதாகவும் கூறுகின்றனர். அவர் மூலமாக ஸ்டாலினுக்கு செக் வைக்க டெல்லி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |