பழமை வாய்ந்த மரம் சாலையில் விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஆண்டுகள் பழமையான காட்டரசு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சென்றனர்.