Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளியுடன் மழைபெய்ய வாய்ப்பு… மீன்பிடிக்க தடை… மீன்துறை அதிகாரிகள் எச்சரிக்கை…!!

சூறாவளியுடன் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறாவளியுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் மீன்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்துள்ளனர். மேலும் தடையை மீறி மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |