Categories
சினிமா

சூர்யா, கார்த்தி செய்த செயல்….. குவியும் பாராட்டுக்கள்….. அப்படி என்ன செய்தார்கள்……?

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் கட்டிடப் பணிகளை தொடங்குவது மற்றும் கட்டிடம் நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெரும் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குனர் வசந்த் ஆகியோர்கள் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டு தெரிவித்து நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிட நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நாசரியரிடம் வழங்கினார்கள்.

Categories

Tech |