சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
#EtharkkumThunindhavan is releasing on Feb 4th, 2022!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop #SaranyaPonvannan #MSBhaskar @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO #ETOnFeb4th pic.twitter.com/hwuwEkX3Bm
— Sun Pictures (@sunpictures) November 19, 2021
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிரடியான வீடியோவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாக உள்ளது . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.