இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின்- 40வது திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து சூர்யாவின் 40-வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா . இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவருக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.