கேரளாவில் சூரிய ஒளி தகடு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் இன்று கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் சரிதா நாயர் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று இடம் சூரிய ஒளி தகடு பொருத்தி தருவதாக கூறி 42 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் சரிதா நாயர். இவர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்களின் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.