Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அதிகாரியின் அதிரடி உத்தரவு… மாவட்டம் முழுவதும் சோதனை… 32 பேர் கைது…!!

சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் படி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் மது விற்பனையை தடுக்க மாவட்ட முழுவதிலும் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பாஸ்கரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல் ஆண்டிபட்டியை அடுத்துள்ள அம்மாபட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வைரம், மேக்கிழார்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 29 பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கம்பம் பகுதியில் ராஜா என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 32 மது பாட்டில்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தம் 32 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 227 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |