Categories
மாநில செய்திகள்

சூப்பர் நியூஸ்…. ரேஷன் கடைகளில் நாளை முதல்…. தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ்….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் வரும் 17-ஆம் தேதி ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அன்றைய தினம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |