Categories
தேசிய செய்திகள்

8 மாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் ஹரிகா…. வாழ்த்துக்கள்….!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரில் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச தரத்தில் அரங்குகள் தயாராகி வருகின்றன. வீரர்களும் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா, 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ளார். உலக அளவில் 10ம் நிலை வீராங்கனை, இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது பெண் ஹரிகா, 6 வயதிலிருந்து செஸ் விளையாடி வருபவர். இதுவரையில் 3 சர்வதேச பட்டங்கள் வென்றுள்ளார். இந்தத் தொடரிலும் வெற்றிபெற. இவரை வாழ்த்தலாமே!

Categories

Tech |