Categories
தேசிய செய்திகள்

நாடே எதிர்பார்ப்பு…! இன்று(31.5.22) விவசாயிகளுக்கு ரூ.2000…. சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 11-வது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனால் இந்த பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் pm-kisan நிதி உதவி திட்டத்தின் கீழ் 11-வது தவணை தொகை மே 31 ஆம் தேதி (இன்று) வந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மே 14 ஆம் தேதியே வங்கி கணக்கில் 2000 ரூபாய் வந்து சேரும் என காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் தற்போது மே 31-ஆம் தேதி(இன்று) பணம் வந்துவிடும் என வெளியாகியுள்ள தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |