உறை பனியில் இருந்து திராட்சை கொடிகளை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் சாப்ளிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திராட்சைக் கொடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளன. இந்நிலையில் ஒயின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற பிரான்சில் நாட்டில் நிலவும் உறை பனியால் திராட்சை சாகுபடி வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனை அடுத்து பனியில் திராட்சைக் கொடி உறையாமலிருக்க விவசாயிகள் செடிகளை சுற்றி தீப்பந்தங்கள் ஏற்றி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் உறைபனியில் இருந்து திராட்சை பயிர் கெடாமல் பாதுகாக்க முடியும் என அந்நாட்டின் பண்ணை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.