Categories
தேசிய செய்திகள்

சூப்பர் அறிவிப்பு…! மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்….. மாநில அரசு இப்படியொரு திட்டம்….!!!!!

ஜார்க்கண்டில் வீட்டில் மரக்கன்று நட்டு, அவற்றை பாதுகாப்பவர்களுக்கு ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். ராஞ்சியில் நடந்த 73-வது வனத் திருவிழாவில் பங்கேற்று பேசிய அவர், “நகர்ப்புறங்களை கான்கிரீட்மயம் ஆக்குவதை மனதில் வைத்து, ஒவ்வொரு மரத்தை நடுவதற்கும் பாதுகாப்பதற்கும் 5 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கும். ஆனால், இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டில் மரங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. எனவே மாநிலத்தின் வனப்பரப்பை அதிகரிப்பதற்காக இந்த வருடம் 2.34 கோடி மரக்கன்று நட அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இது செடி வளர்ப்புக்கு பொருந்தாது. சரியான மரமாக இருக்க வேண்டும். இது எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்புக் உதவும் வகையில் பயனுள்ளதாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால் இது நகரங்களில் இருந்து பசுமை மறைவதற்கு வழிவகிக்கிறது. அரசன் இந்த சலுகை மாநிலத்தின் நகர் புறங்களில் பசுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Categories

Tech |