கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 16-ம் தேதி மாலை 5 மணி அளவில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் அன்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணிகளை தொடங்கி வைத்தார்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறக்கப்படாத நிலையில், கடந்த 17-ஆம் தேதி முதல் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான கால அவகாசமானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி அதிகாலை 4 மணிக்கு பதிலாக 3 மணிக்கும், மாலை நேரத்திலும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கும் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.