Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. 14,000 பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.27 கோடி திட்டம்…… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியது, நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகள், ‘பிரதமர்-ஸ்ரீ’ பள்ளிகளாக உருவெடுக்க தரம் உயர்த்தப்படும். அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் பள்ளிகள் இதில் சேர்க்கப்படும். இதற்கான மொத்த செலவு 5 ஆண்டுகளுக்கு ரூ.27,360 கோடி ஆகும்.

அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் பங்கு ரூ.18, 128 கோடி. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 87 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள். ரெயில்வே நிலத்தை ‘பிரதமரின் கதிசக்தி’ திட்டத்துக்காக நீண்டகால குத்தகைக்கு விடும் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போதைய 5 ஆண்டுகளுக்கு பதிலாக 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். அந்த நிலங்களில் 300 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. மேலும் 11 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,957 கோடி செலவில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும். இந்த வழித்தடத்தில் 11 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |