Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறவிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் 15  உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக  1,980 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தாங்கள் வாக்களிப்பதற்காக தபால் வாக்குகளை விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் நீலகிரியில் 15 உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து இதுவரை  379 பேர் தபால் வாக்குக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில்  இதுவரை 300 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டுள்ளது. ஊட்டி உள்பட்ட  15  நகராட்சிகளில் தபால் வாக்குகளை பெறுவதற்காக வாக்கு சேகரிக்கும்  பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தபால் வாக்குகள்  22ஆம் தேதி வரை  பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |