Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கோழிச்சாறு… செய்து பாருங்கள் …!!!

கோழிச்சாறு செய்ய தேவையான பொருள்கள் :

கோழிக் குஞ்சு            – 1 கிலோ
தக்காளி                         – 2
மிளகு                             –  2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 15
சீரகம்                              –  3 தேக்கரண்டி
பூண்டு                            –  9 பற்கள்
தனியா                          –  3 தேக்கரண்டி
வெந்தயம்                   –   3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்     – 3
கடலைப்பருப்பு        –  2 தேக்கரண்டி
கறிவேப்பிலை        – 15 இலைகள்
மஞ்சள் தூள்             – 2 தேக்கரண்டி
உப்பு                              – தேவையான அளவு
எண்ணெய்                –  2 தேக்கரண்டி

 செய்முறை :

முதலில் கோழியைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதன் பின் தக்காளியைப் பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும், வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா, வெந்தயம் மற்றும் கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்தெடுத்து, நைசாகப் பொடி செய்து கொள்ளவும்.

பின்பு அத்துடன் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து  அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்து வைத்திருக்கும் கோழி துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

அடுத்து கோழி வதங்கியதும் தக்காளி, அரைத்த விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வேக வைத்து 15 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சுவையான கோழிச்சாறு ரெடி.

Categories

Tech |