கூட்டாஞ்சோறு செய்ய தேவையான பொருள்கள் :
கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் – ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய்,நெய் – தேவையான அளவு
தேங்காய் – அரை மூடி
சீரகம், மிளகு, வெந்தயம் – தலா ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
ஆல் பர்பஸ் பொடி – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 3
பச்சை மிளகாய் – 5
சாம்பார் பொடி – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
லீமா பீன்ஸ் – கால் கப்
காரட் – ஒனறு
காலிஃப்ளவர் – கால் பகுதி
பீன்ஸ் – 15
வேக வைத்த துவரம் பருப்பு – அரை கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
அரிசி – 2 கப்
கத்தரிக்காய் – 2
சிறிய முள்ளங்கி – 6
உப்பு – தேவையான அளவு
முளைக்கட்டிய பச்சைபட்டாணி,
கொத்தமல்லி – தேவைக்கு
சின்ன வெங்காயம் – 2
செய்முறை :
முதலில் காய்கறிகள் அனைத்தையும் நீளவாட்டில் நறுக்கி வைக்கவும். பருப்பை நல்லெண்ணெய், பூண்டு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து மசிக்கவும். புளியைக் நன்கு கரைத்து வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பின்பு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்கறிகளையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
பின்பு குக்கரில் அரிசி, புளிக் கரைசல், பருப்பு, காய்கறி, அரிசி, உப்பு, சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் பொடி போன்றவைற்றை சேர்த்து வேகவிடவும்.
அடுத்தது நன்கு வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். கடைசியாக ஆல் பர்பஸ் பொடி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.