கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் கோவை குற்றாலத்திற்கு பாதுகாப்பு கருதியும் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை குற்றாலத்திற்கு தொடர்ச்சியாக மழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.