கோவை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏளனமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து அருவிக்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அனைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியையும் அதில் உள்ள வனவிலங்கு குறித்து தெரிந்து கொள்வதற்காக சோதனை சாவடி அருகில் பொருள் விளக்கம் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் அதன் அருகில் சிறுவர் பூங்காவும் இருக்கிறது. தற்போது இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு பொருட்கள் பழுதாகி உள்ளதுடன், பொருள் விளக்கம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் வனவிலங்கு புகைப்படங்களும் சேதம் அடைந்துள்ளது. எனவே இந்த பொருள் விளக்கம் மையத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில் கோவை மண்டல வன பாதுகாப்பல ராமசுப்பிரமணியன் திடீரென்று சாடிவயில் சோதனை சாவடி சென்றார். அதன் பிறகு அவர் அங்குள்ள பொருள் விளக்கம் மையத்துக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு செய்தமடைந்த புகைப்படங்களை அகற்றிவிட்டு வேறு புகைப்படங்களை வைத்து அதற்கான விளக்க காட்சிகளை வைக்க வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பூங்காவில் பழுதான விளையாட்டு பொருட்களை அகற்றிவிட்டு புதிதாக விளையாட்டு பொருட்களை வைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவை குற்றால அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதிலும் விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே இங்கு சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு வசதிகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இங்கு உள்ள மர வீடுகள் போன்ற அமைப்புகள் கொண்ட வீடுகளை சரி செய்து அங்கு இரவு தங்க வசதி கொடுக்கப்பட இருக்கிறது. அதனைப்போல அருவிக்கு செல்லும் வழியில் சேதமடைந்து காணப்படும் தொங்கு பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தொங்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும் ஆங்காங்கே வனவிலங்கு போன்று அதன் உருவ பொம்மைகளும் செய்து வைக்கப்படவுள்ளது. இது போன்ற பல்வேறு வசதிகளை அமைக்கும் போது இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் எங்கு வருவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.