Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. ஊட்டியில் கோர விபத்து….!!

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலைக்கு வேணியில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்த பொது வேன் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்து டிரைவர் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். மேலும் வேனில் இருந்த 7 சுற்றுலா பயணிகளும் பலத்தகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |