தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்த மூன்று பேரை அதிமுகவிலிருந்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர் .மதுரை மாநகர் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சுரேஷ், பொன்னமராவதி ஒன்றிய முன்னாள் செயலாளர் அழகு சுப்பையா, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் தங்கராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.